மீனவர்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

கடற்றொழிலாளர்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

by Staff Writer 26-08-2019 | 3:29 PM
Colombo (News 1st) நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை, புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஏனைய கடற்பிராந்தியங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. அத்துடன், ஹம்பாந்தோட்டை முதல் புத்தளம் ஊடாக கல்முனை வரையான கடற்பிராந்தியங்களில் புத்தளம் முதல் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனால் கடற்றொழிலாளர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.