by Staff Writer 26-08-2019 | 3:05 PM
Colombo (News 1st) ஹொங்கொங்கில் முன்னெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின்போது வன்முறைகளில் ஈடுபட்ட 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காக பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசி, நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, பாதுகாப்புப் படையினர் மீது போராட்டக்காரர்கள் பெற்றோல் குண்டுகளை வீசியுள்ளனர்.
இதன்போதே வன்முறைச் சம்பவங்கள் வலுப்பெற்றதாக ஹொங்கொங் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 12 வயதான இளையவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.