தென் கொரிய பயிற்சிகளை நிறுத்துமாறு வலியுறுத்தல்

தென் கொரிய கடற்படைப் பயிற்சிகளை நிறுத்துமாறு ஜப்பான் வலியுறுத்தல்

by Chandrasekaram Chandravadani 25-08-2019 | 5:55 PM
Colombo (News 1st) தென் கொரியவினால் சர்ச்சைக்குரிய டகேஷிமா தீவுகளில் முன்னெடுக்கப்படும் கடற்படைப் பயிற்சிகளை முடிவிற்குக் கொண்டுவருமாறு ஜப்பான் வலியுறுத்தியுள்ளது. தென் கொரியாவின் இந்த நடவடிக்கையை ஏற்க முடியாது எனவும் கடற்படைப் பயிற்சிகளை முடிவிற்குக் கொண்டுவருமாறு ஜப்பானிய வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தென் கொரிய ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள டகேஷிமா தீவுகளுக்கு ஜப்பான் உரிமைகோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.