by Staff Writer 25-08-2019 | 2:56 PM
Colombo (News 1st) நிலவும் மழையுடனான வானிலையுடன் டெங்கு காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவும் அபாயமுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் 60 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்கள், தாமதமாக சிகிச்சைகளைப் பெறுவதே உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுவரையான காலப்பகுதியில் 40 000க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மேல் மாகாணத்திலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் டெங்கு ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு, எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் கூறியுள்ளார்.