உற்பத்திகள் விற்பனை நிலையமூடாக சந்தைப்படுத்தல்

கேகாலை விவசாயிகளின் உற்பத்திகளை விற்பனை நிலையங்களினூடாக சந்தைப்படுத்த தீர்மானம்

by Staff Writer 24-08-2019 | 4:28 PM
Colombo (News 1st) கேகாலை மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் உற்பத்திகளை விற்பனை நிலையங்களினூடாக சந்தைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் உற்பத்திகள் மூன்றாம், நான்காம் தரப்பினரால் கொள்வனவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் போது ஏற்படும் சிக்கல்களை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 11 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.