தென்கிழக்கு பல்கலை விடுதிக்குள் மாணவரின் சடலம்

தென்கிழக்கு பல்கலைக்கழக விடுதிக்குள் மாணவரின் சடலம்

by Staff Writer 23-08-2019 | 5:22 PM
Colombo (News 1st) தென்கிழக்கு பல்கலைக்கழக விடுதிக்குள் மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை மாணவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. நுவரெலியா - பூண்டுலோயா பகுதியை சேர்ந்த கணேஷ்வரன் துர்கேஷ்வரன் என்ற 24 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியில் பீடத்தில் மூன்றாம் வருடத்தில் இந்த மாணவர் கல்வி கற்பதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். உயிரிழந்த மாணவரின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.