இருவேறு விபத்துகளில் இருவர் பலி

இருவேறு விபத்துகளில் இருவர் பலி

by Staff Writer 23-08-2019 | 3:48 PM
Colombo (News 1st) சிகிரியா மற்றும் கரன்தெனிய பகுதிகளில் இடம்பெற்ற இரு வேறு விபத்துகளில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர். தம்புள்ளை - ஹபரண வீதியில் சிகிரியா திகம்பத்தஹா பகுதியில் வேன் ஒன்று பஸ்ஸூடன் மோதி விபத்திற்குள்ளானதில் 27 பேர் காயமடைந்துள்ளனர். இன்று காலை 6 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்தவர்கள் தம்புள்ளை மற்றும் ஹபரண வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, எல்பிட்டிய - அம்பலாங்கொட கரன்தெனிய பகுதியில் மோட்டார் சைக்கிளில் மோதி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்தில் 33 மற்றும் 27 வயதான பெலகஸ்வத்த மற்றும் சினிகொட பகுதியை சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளனர்.