இராஜாங்க அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் காங்கிரஸினர் இருவர் மீண்டும் பதவியேற்பு

by Staff Writer 23-08-2019 | 3:31 PM
Colombo (News 1st) இராஜாங்க அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மீண்டும் இராஜாங்க அமைச்சுப் பதவிகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டனர். பைசல் காசிம் மற்றும் அலி சாஹிர் மௌலானா ஆகியோரே மீண்டும் இராஜாங்க அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றனர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று முற்பகல் இவர்கள் இராஜாங்க அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக்கொண்டனர். சுகாதார மற்றும் போசாக்கு , சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சராக பைசல் காசிம் பொறுப்பேற்றுக்கொண்டார். ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராக அலி சாஹிர் மௌலானா பதவியேற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.