அவசரகால சட்ட ஏற்பாடுகள் நீக்கம்

அவசரகால சட்ட ஏற்பாடுகள் நீக்கம்

by Staff Writer 23-08-2019 | 7:45 PM
Colombo (News 1st) அவசரகால சட்ட ஏற்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் அவசரகால சட்ட ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டன. நாட்டில் நிலவும் இயல்பு நிலையை கருத்திற்கொண்டு, இன்று முதல் அவசரகால ஏற்பாடுகள் நீடிக்கப்படாது என பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.