.webp)
Colombo (News 1st)
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டமை தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரி (Staff Sergeant) சாமிக்க சுமித் குமார குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.