by Staff Writer 22-08-2019 | 9:16 AM
Colombo (News 1st) வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சிப் பாடசாலையின் சிறைச்சாலை அதிகாரி கொலை செய்யப்படுவதற்கு உதவி புரிந்த மற்றுமொருவர் ஹிக்கடுவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு மோட்டார்சைக்கிள் வழங்கி உதவி புரிந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பன்னல பகுதியைச் சேர்ந்த 25 வயதான குறித்த சந்தேநபர் இன்று (22) பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கடந்த 3 ஆம் திகதி அம்பலாங்கொட - குலீகொட பகுதியில் மோட்டார்சைக்கிளில் வந்த இருவரால் வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சிப் பாடசாலையின் சிறைச்சாலை அதிகாரி கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.