பிரதமரின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

பிரதமரின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

by Staff Writer 22-08-2019 | 8:05 PM
Colombo (News 1st) கடந்த காலங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு இன்று அறிவித்தல் விடுத்துள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவிற்கு இந்த மாதம் 27 ஆம் திகதி காலை 9 மணிக்கு வருகை தந்து, வாக்குமூலம் வழங்குமாறு பிரதமரின் செயலாளருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சிற்காக இராஜகிரிய பிரதேசத்தில் கட்டடமொன்று வாடகைக்கு பெறப்பட்ட சந்தர்ப்பத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி குறித்த முறைப்பாட்டுடன் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார். கட்டடத்தை வாடகைக்கு பெறுவதற்கான அமைச்சரவை பத்திரம் பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்டமை, ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஏற்கனவே வௌிக்கொணரப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்