தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் ஏற்பு

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை ஆரம்பம்

by Staff Writer 22-08-2019 | 7:38 AM
Colombo (News 1st) எதிர்வரும் தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் பிரதித் தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையில் நாளை (23) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் தேர்தல் தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.