கடற்றொழிலுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு அறிவிப்பு

கடற்றொழிலுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவிப்பு

by Staff Writer 22-08-2019 | 5:40 PM
Colombo (News 1st) சில கடல் பிரதேசங்கள் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், கடற்றொழிலுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகரிப்பதால், புத்தளம் முதல் மன்னார் , காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பிராந்தியங்களும் மாத்தறை கடற்பிராந்தியங்களும் கொந்தளிப்பாக இருக்கும் என கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதியில் இருந்து 24 மணித்தியாலங்களுக்கு கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்