எம்.ஏ. சுமந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா: எம்.ஏ. சுமந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

by Staff Writer 21-08-2019 | 6:52 PM
Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உயர் நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். எல்லை நிர்ணய அறிக்கை இன்றி மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா என்பதை தௌிவுபடுத்துமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தின் இடைமனுதாரராக இணைந்துகொள்ள அனுமதி கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எல்லை நிர்ணய அறிக்கை இன்றி, பழைய முறைக்கு அமைய மாகாண சபை தேர்தலை நடத்த ஜனாதிபதிக்கு சட்ட ரீதியாக அதிகாரம் இல்லை என்ற கட்டளையை பிறப்பிக்குமாறு எம்.ஏ. சுமந்திரனின் மனுவில் கோரப்பட்டுள்ளது. ஜனாதிபதியால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விண்ணப்பம், நாளை மறுதினம் முற்பகல் 10 மணிக்கு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.