பயணிகளுக்குத் தரமான போக்குவரத்தை வழங்க நடவடிக்கை

பயணிகளுக்குத் தரமான போக்குவரத்தை வழங்க நடவடிக்கை

by Staff Writer 21-08-2019 | 1:50 PM
Colombo (News 1st) பயணிகளுக்கு மிகவும் வசதியான மற்றும் தரமான போக்குவரத்து சேவையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் தொகுதிக்கு 2000 பஸ்களைப் பயன்படுத்துவதற்காக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்புகளை விடுத்து விருப்புகள் மற்றும் ஆலோசனைகள் கோரப்படவுள்ளன. இதற்கான போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.