by Staff Writer 21-08-2019 | 8:09 AM
Colombo (News 1st) என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் 1000 தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் விசேட முயற்சியில் இலங்கை வங்கி ஈடுபட்டுள்ளது.
சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா கடன் திட்டத்தின் கீழ் இலங்கை வங்கியிடம் இருந்து இதுவரை 9 048 பேர் கடன் பெற்றுள்ளனர்.
அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த சிறுதொழில் முயற்சியாளர்களுக்காக 386 மில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட தொகை வழங்கப்பட்டுள்ளது.