English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
21 Aug, 2019 | 4:42 pm
Colombo (News 1st) இலங்கைக்கான ஜப்பானின் முன்னாள் விசேட சமாதான தூதுவர் யசுஷி அகாஷி (Yasushi Akashi) தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் நிறைவு செய்யப்பட்ட போதிலும் , தமிழ் மக்களின் கோரிக்கைகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என இரா.சம்பந்தன் இதன்போது கூறியுள்ளார்.
யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவருவதில் சர்வதேச சமூகம் பாரிய பங்கேற்றிருந்ததாகவும் யசுஷி அகாஷியிடம் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினை எட்டுவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதிலும் அவை நிறைவேற்றப்படவில்லை எனவும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கத்திற்கு நினைவூட்டி அவற்றினை நிறைவேற்றுவது சர்வதேச சமூகத்தின் கடமையாகும் எனவும் இரா.சம்பந்தன் வலியுறுத்தியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத் தவறுகின்ற பட்சத்தில் அது தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல முழு நாட்டிற்கும் பாதிப்பாக அமையும் எனவும் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.
08 Oct, 2020 | 07:56 PM
08 Jul, 2020 | 05:29 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS