29,174 மில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

by Staff Writer 20-08-2019 | 7:37 PM
Colombo (News 1st) 29,174 மில்லியன் ரூபா பெறுமதியான குறைநிரப்பு பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கடனை மீள செலுத்துவதற்காக 6500 மில்லியன் ரூபா இந்த குறைநிரப்பு பிரேரணையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆலோசகர்களை இணைத்துக்கொள்வதற்காக 300 இலட்சம் ரூபா நிதியை இதில் ஒதுக்குமாறும் கோரப்பட்டுள்ளது. மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததில் பாதிக்கப்பட்ட காணிகளுக்கான இழப்பீடு வழங்குவதற்கான மேலதிக ஒதுக்கீட்டிற்காக 21 மில்லியன் ரூபா இந்த குறைநிரப்பு பிரேரணையில் ஒதுக்கப்பட்டுள்ளது.