வறட்சியுடனான வானிலை தொடர்பிலான விசேட விவாதம்

வறட்சியுடனான வானிலை தொடர்பிலான விசேட விவாதம் இன்று

by Staff Writer 20-08-2019 | 8:02 AM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வறட்சியுடனான வானிலை தொடர்பில் இன்று (20) பாராளுமன்றத்தில் விசேட விவாதம் இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது. வறட்சி குறித்து மக்கள் விடுதலை முன்னணியினால் இன்று ஒத்திவைப்பு வேளை பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது. வறட்சி மற்றும் அதற்காக வழங்கப்படும் இழப்பீடுகள் குறித்து வினாக்கள் தொடுக்கப்படவுள்ளதுடன், விவாதங்கள் இடம்பெறவுள்ளதாகவும் நியூஸ்பெஸ்ட்டின் பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.