முன்னாள் இராணுவத் தளபதிக்கு பதவி உயர்வு

முன்னாள் இராணுவத் தளபதிக்கு பதவி உயர்வு

by Staff Writer 20-08-2019 | 12:29 PM
Colombo (News 1st) முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார். முப்படைகளின் பிரதானி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 17 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக் காலம் கடந்த வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் திகதி இலங்கை இராணுவத் தளபதியாக பதவியேற்ற அவர் 2 வருடங்களுக்கு மேல் அந்த பதவியில் சேவையாற்றியமை குறிப்பிடத்தக்கது.