மரண தண்டனைக்கு எதிரான 3 மனுக்கள் நிராகரிப்பு: பிரதி சபாநாயகர் அறிவிப்பு

by Staff Writer 20-08-2019 | 3:26 PM
Colombo (News 1st) மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார். இன்றைய சபை நடவடிக்கையின் ஆரம்பத்தின் போது, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகரின் அறிவித்தலூடாக பிரதி சபாநாயகர் சபைக்கு தெரிவித்துள்ளார். இதேவேளை, காணி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளமையால், அதனை ஒழுங்குப் பத்திரத்திலிருந்து நீக்குவதாக சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அறிவித்துள்ளார். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு மதிப்பளித்து , காணி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தினை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாது, ஒழுங்குப் பத்திரத்திலிருந்து நீக்கிக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.