நீர்மின் உற்பத்தி 25 வீதத்தால் உயர்வு

நீர்மின் உற்பத்தி 25 வீதத்தால் உயர்வு

by Staff Writer 20-08-2019 | 2:25 PM
Colombo (News 1st) மழையுடனான வானிலை காரணமாக நீர்மின் உற்பத்தி 25 வீதத்தால் உயர்வடைந்துள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மின்சார நெருக்கடிக்கு ஓரளவு தீர்வு கிட்டியுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார். மின் உற்பத்திகள் மேற்கொள்ளப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். எனினும், சில நீர்த்தேக்கங்களில் 30 வீதத்திற்கும் குறைவான நீர்மட்டமே காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். நாளாந்த 25 வீதமான மின்நுகர்வு, நீர்மின் உற்பத்தியூடாக மேற்கொள்ளப்படுவதாகவும் மின்சக்தி அமைச்சன் ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.