ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் விசேட கலந்துரையாடல்

by Staff Writer 20-08-2019 | 9:14 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. தலவத்துகொடையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், அஜித் பி.பெரேரா, நலீன் பண்டார ஜயமஹ, ஹெக்டர் அப்புஹாமி, சந்திரானி பண்டார, ஹேஷா விதானகே, தலதா அத்துக்கோரல மற்றும் எஸ்.எம். மரிக்கார் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 97 உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.