by Staff Writer 20-08-2019 | 9:51 AM
Colombo (News 1st) ஹொங்கொங் விவகாரம் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பிய பேஸ்புக் மற்றும் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
ஹொங்கொங் அரசியல் தொடர்பில் கருத்துக்களைப் பதிவிட்ட 936 கணக்குகளை முடக்கியுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வன்முறைகளைத் தூண்டும் வகையில் பதிவுகளை இட்ட, 5 கணக்குகள், 3 குழுக்கள் மற்றும் 7 பக்கங்களை முடக்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சீனப் பிரஜைகளின் கணக்குகளே இவ்வாறு வன்முறையைத் தூண்டிய குற்றச்சாட்டில் முடக்கப்பட்டுள்ளன.
ஹொங்கொங் அரசுக்கு எதிராகக் கடந்த மார்ச் மாதம் முதல் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.