by Staff Writer 20-08-2019 | 8:21 AM
Colombo (News 1st) கிராமத்திற்கு கிராமம் மக்கள் மன்றம், இன்று (20) தனது இரண்டாவது நாள் செயற்றிட்டத்தை தவலம பகுதியிலிருந்து ஆரம்பித்துள்ளது.
குரலற்ற மக்களின் பிரச்சினைகளை பொது அரங்கிற்குக் கொண்டுவரும் நோக்குடன் கிராமத்திற்கு கிராமம் - மக்கள் மன்றம் இயங்குகின்றது.
மக்கள் சக்தி செயற்றிட்டத்தின் மூலம் கடந்த 4 வருடங்களாக சேர்க்கப்பட்ட பொது மக்களின் பிரச்சினைகள் சார் ஆவணங்களும் இதன்போது காட்சிப்படுத்தப்படவுள்ளன.
மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் திட்டத்தினூடாக அடையாளப்படுத்தப்பட்ட 8 பிரச்சினைகளுக்கான தீர்வை உடனடியாக செயற்படுத்துவதற்கு மக்களும் பங்களிப்பு செய்யும் வாய்ப்பு இதனூடாக வழங்கப்படவுள்ளது.
இதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள விசேட விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்திசெய்து மக்கள் சக்தி குழுவினரிடம் ஒப்படைக்க முடியும்.
கிராமத்திற்கு கிராமம் மக்கள் மன்றம் செயற்றிட்டம் தலைமையக வளாகத்திலிருந்து சர்வமதத் தலைவர்களின் ஆசியுடன் நேற்று (19) ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.