by Staff Writer 20-08-2019 | 8:23 AM
Colombo (News 1st) நெல்லின் உத்தரவாத விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக விவசாய, கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடைகள் அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் பீ ஹரிசன் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் ஒரு கிலோ நாடு வகை நெல்லின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படும் பட்சத்தில் , 43 ரூபா உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.