லூசியானா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் காலமானார்

லூசியானா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் காலமானார்

by Staff Writer 19-08-2019 | 4:25 PM
Colombo (News 1st) அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் கத்லீன் பபினியூக்‌ஸ் பிளான்கோ (Kathleen Babineaux Blanco) தமது 76 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். புற்றுநோய்த் தாக்கம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். லூசியானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக 2004 ஆம் ஆண்டில் இவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார். கத்லீன் பிளன்கோ ஆளுநராக கடமையாற்றிய காலத்திலேயே கத்தரீனா சூறாவளி, லூசியானா மாநிலத்தைத் தாக்கியிருந்தது. இந்தச் சூறாவளியானது 1800 இற்கும் அதிகமானோர் உயிரிழக்கவும் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயரவும் காரணமாக அமைந்தது. இந்த விடயம் தொடர்பில் கத்லீன் பபினியூக்‌ஸ் பிளான்கோ உள்ளிட்ட அரசியல்வாதிகள் மந்தகதியில் நடவடிக்கை மேற்கொண்டதாக விமர்சிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.