புதிய தூதுவர்கள் தமது நியமனப்பத்திரங்களை கையளிப்பு

புதிய ஐரோப்பிய தூதுவர்கள், உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியிடம் நியமனப்பத்திரங்களை கையளிப்பு

by Staff Writer 19-08-2019 | 7:21 PM
Colombo (News 1st) இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய தூதுவர்கள் இருவர் மற்றும் உயர்ஸ்தானிகர் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நியமனப் பத்திரங்களை கையளித்துள்ளனர். நோர்வே, ஐக்கிய இராச்சியம் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ட்ரீன் எஸ்கடேல் நோர்வேயின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்து ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகராக சாரா ஹல்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு எதிர்ப்பார்ப்பதாக, சாரா ஹல்டன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். இலங்கையுடனான இருதரப்பு உறவைப் புதிய அணுகுமுறைகளுடன் பலப்படுத்த புதிய தூதுவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது நம்பிக்கை வௌியிட்டதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.