புதிய இராணுவத் தளபதியாக ஷவேந்திர சில்வா நியமனம்

by Staff Writer 19-08-2019 | 3:43 PM
Colombo (News 1st) புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய, இலங்கையின் 23ஆவது இராணுவத் தளபதியாக அவர் பதவியேற்கவுள்ளார். இராணுவத் தளபதியாக ஷவேந்திர சில்வாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் ஷாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார். 1984 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் பயிலுநர் கெடட் உத்தியோகத்தராக இணைந்துகொண்ட ஷவேந்திர சில்வா, இறுதிக்கட்ட யுத்தத்தின்போது 58 ஆம் படைப்பிரிவின் தளபதியாக செயற்பட்டுள்ளார். இவ்வருடம் ஜனவரி மாதத்திலிருந்து இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக லெப்டினன் ஜெனரல் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.