பளை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கைது

பளை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கைது

by Staff Writer 19-08-2019 | 1:05 PM
Colombo (News 1st) கிளிசொச்சி - பளை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி, இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில், குறித்த சட்ட வைத்திய அதிகாரி நேற்றிரவு (18) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். பிராந்திய பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் சந்தேகநபர் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்திட்யசகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். சாவக்கச்சேரியைச் சேர்ந்த 41 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.