நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை

by Staff Writer 19-08-2019 | 7:15 PM
Colombo (News 1st) எதிர்வரும் நாட்களில், நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வட மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி, பதுளை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்