எதிர்க்கட்சித் தலைவர் - யசூஷி அகாஷி இடையே சந்திப்பு

by Staff Writer 19-08-2019 | 3:54 PM
Colombo (News 1st) புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான ஜப்பானின் முன்னாள் சமாதானத் தூதுவர் யசூஷி அகாஷி இன்று (19) எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளார். விஜேராமவில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் G.L. பீரிஸ், எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் ஹர்ஷ விஜேவர்தன ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

ஏனைய செய்திகள்