சான்ட்விச் கிடைக்க தாமதம்; ஊழியர் சுட்டுக் கொலை

சான்ட்விச் தாமதமானதால் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்

by Staff Writer 18-08-2019 | 1:55 PM
Colombo (News 1st) பாரிஸில் சான்ட்விச் வழங்குவதற்குத் தாமதமானதால் உணவகம் ஒன்றின் ஊழியர், வாடிக்கையாளர் ஒருவரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த வாடிக்கையாளர் ஓடர் செய்த சான்ட்விச் கிடைப்பதற்குத் தாமதமானதால் ஏற்பட்ட கோபம் காரணமாக அவர் இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாரிஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் தப்பிச்சென்றுள்ளதுடன், அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை எனக் கூறப்படுகின்றது.