கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும்

முல்லைத்தீவு தொடக்கம் பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும்

by Staff Writer 17-08-2019 | 4:18 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு தொடக்கம் திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்த கடற்பிராந்தியங்களை பயன்படுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாட்டின் கிழக்கு கடற்பிராந்தியத்தில் வினைத்திறன் மிக்க மேகக்கூட்டம் விருத்தியடைவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.