இலங்கை பொலிஸ் கழக அணி சாம்பியனானது

சர்வதேச பொலிஸ் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சாம்பியனானது

by Staff Writer 17-08-2019 | 9:29 PM
Colombo (News 1st) சர்வதேச பொலிஸ் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இலங்கை பொலிஸ் கழக அணி சாம்பியனானது. ஆறாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டித் தொடர் இங்கிலாந்தின் வொஸ்டர்ஷயரில் 5 நாட்களாக நடைபெற்றது. இருபதுக்கு 20 போட்டிகளாக நடத்தப்பட்டத் தொடரில் 16 நாடுகளின் பொலிஸ் அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்து இலங்கை அணி சாம்பியனானது. இலங்கை அணிக்கு பொலிஸ் அத்தியட்சகர் கமல் புஷ்பகுமார தலைவராக செயற்பட்டார். பங்கேற்ற முதல் சந்தர்ப்பத்தி​லேயே இலங்கை பொலிஸ் அணி சாம்பியனாகியுள்ளமை சிறப்பம்சமாகும்.