by Staff Writer 17-08-2019 | 9:29 PM
Colombo (News 1st) சர்வதேச பொலிஸ் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இலங்கை பொலிஸ் கழக அணி சாம்பியனானது.
ஆறாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டித் தொடர் இங்கிலாந்தின் வொஸ்டர்ஷயரில் 5 நாட்களாக நடைபெற்றது.
இருபதுக்கு 20 போட்டிகளாக நடத்தப்பட்டத் தொடரில் 16 நாடுகளின் பொலிஸ் அணிகள் பங்கேற்றன.
இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்து இலங்கை அணி சாம்பியனானது.
இலங்கை அணிக்கு பொலிஸ் அத்தியட்சகர் கமல் புஷ்பகுமார தலைவராக செயற்பட்டார்.
பங்கேற்ற முதல் சந்தர்ப்பத்திலேயே இலங்கை பொலிஸ் அணி சாம்பியனாகியுள்ளமை சிறப்பம்சமாகும்.