அவுஸ்திரேலியா சென்ற 13பேர் திருப்பியனுப்பப்பட்டனர்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற 13 பேர் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்

by Staff Writer 17-08-2019 | 3:51 PM
Colombo (News 1st) சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்ற 13 பேர் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். நீண்டநாள் ஆழ்கடல் படகு மூலம் இவர்கள் அவுஸ்திரேலியா சென்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கயான் மிலிந்த குறிப்பிட்டார். அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக சென்ற 13 பேரும் விசேட விமானம் மூலம் நாட்டிற்கு நேற்று (16) திருப்பி அனுப்பப்பட்டனர். மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.