காசல்ரீ நீர்த்தேக்கத்தில் சிசுவின் சடலம்

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் சிசுவின் சடலம்

by Staff Writer 17-08-2019 | 5:34 PM
Colombo (News 1st) ஹட்டன் - காசல்ரீ நீர்த்தேக்கத்தில் சிசு ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காசல்ரீ நீர்த்தேக்கத்தின் வோர்லி தோட்டக்கரையில் சிசுவின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். இன்று முற்பகல் மீன்பிடிக்க சென்ற சிலர் சடலத்தைக் கண்டுள்ளனர். பிறந்த உடனேயே சிசு ஆற்றில் வீசப்பட்டிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பலத்த மழை காரணமாக டிக்கோயா ஆற்றிலிருந்து, காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு சிசுவின் சடலம் அடித்துச் செல்லப்பட்டிருக்கும் எனவும் பொலிஸார் கூறினர். நீதவான் விசாரணைகளின் பின்னர், சட்ட மருத்துவ பரிசோதனைக்காக சடலத்தை கிளங்கள் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.