கந்தப்பளையில் விபத்து: இருவர் உயிரிழப்பு

கந்தப்பளையில் முச்சக்கரவண்டி குடைசாய்ந்தது: இருவர் உயிரிழப்பு

by Staff Writer 17-08-2019 | 3:28 PM
Colombo (News 1st) நுவரெலியா - உடப்புஸ்ஸல்லாவ பிரதான வீதியில் கந்தப்பளை - ஐஸ்பீலி சந்திக்கு அருகில் முச்சக்கரவண்டி ஒன்று பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் இரண்டு சிறார்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த சிறார்கள் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் சடலங்களும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. கண்டியிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றே இன்று முற்பகல் 10.30 அளவில் பள்ளத்தில் வீழந்து விபத்திற்குள்ளானது. தாயும் தந்தையும் இரண்டு பிள்ளைகளும் குறித்த முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளதுடன், விபத்தில் சிறார்கள் காயமடைந்துள்ளதுடன் தந்தையும், தாயும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். விபத்து தொடர்பில் கந்தப்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய செய்திகள்