by Staff Writer 17-08-2019 | 4:02 PM
Colombo (News 1st) தெஹிவளை கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்திய படகொன்று தொடர்பில் கடற்படையினர், கரையோர பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
படகு தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆழ்கடலில் விபத்திற்குள்ளானமையால் குறித்த படகு கரையொதுங்கி இருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நேற்று இரவு 9 மணியளவில் தெஹிவளை கரையோரத்தில் ஒதுங்கிய படகை கடற்படையினர் பொறுப்பேற்றுள்ளனர்.