வறட்சியால் 6,82,000-இற்கும் அதிகமானோர் பாதிப்பு

வறட்சியால் 6,82,000-இற்கும் அதிகமானோர் பாதிப்பு

by Staff Writer 16-08-2019 | 4:12 PM
Colombo (News 1st) நாட்டில் நிலவும் வறட்சியுடனான வானிலையால் 6,82,000-இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வட மாகாணத்திலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வறட்சியினால் வட மாகாணத்தில் மாத்திரம் 2,28,000-இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் 1,63,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தவிர, மத்திய மாகாணத்தில் சுமார் 73,000 பேரும் வட மத்திய மாகாணத்தில் சுமார் 28,000 பேரும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வறட்சியினால் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவும் பகுதிகளுக்கு பௌசர் மூலம் குடிநீர் வழங்கப்படுவதாகவும் இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார்.