சிறுபோக நெல் கொள்வனவு இம்மாத இறுதியில் ஆரம்பம்

சிறுபோக நெல் கொள்வனவு இம்மாத இறுதியில் ஆரம்பம்

by Staff Writer 16-08-2019 | 4:07 PM
Colombo (News 1st) சிறுபோகத்தின் நெல் கொள்வனவு இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளதாக நெல் கொள்வனவு சபை அறிவித்துள்ளது. கடந்த பெரும்போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல், சிறு நெல் ஆலை உரிமையாளர்களுக்கு விநியோகிக்கப்படும் எனவும் நெல் கொள்வனவு சபையின் தலைவர் கஸ்தூரி அநுராதநாயக்க தெரிவித்தார். கடந்த பெரும்போகத்தின் போது கொள்வனவு செய்யப்பட்ட 5000 மெட்ரிக் தொன் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நெல்லுக்கான உத்தரவாத விலையை அரசாங்கம் தற்போது அதிகரித்துள்ளது. அதன்படி, 38 ரூபாவாக இருந்த நாட்டரிசி நெல் இந்த சிறுபோகத்தில் 43 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படுகிறது. அத்துடன், சம்பாவிற்கான உத்தரவாத விலை 41 ரூபாவிலிருந்து 46 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலையின் பிரகாரம், நெல் கொள்வனவு இம்மாத இறுதியில் இருந்து ஆரம்பமாகும் எனவும் நெல் கொள்வனவு சபையின் தலைவர் குறிப்பிட்டார்.