குடு ரொஷானின் சகோதரர் உள்ளிட்ட மூவர் கைது

கிராண்ட்பாஸில் இருவர் கொலை: குடு ரொஷானின் சகோதரர் உள்ளிட்ட மூவர் கைது

by Staff Writer 16-08-2019 | 3:32 PM
Colombo (News 1st) கிராண்ட்பாஸ் - மாதம்பிட்டி மயானத்திற்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் பயணித்த முச்சக்கரவண்டியை மாதம்பிட்டி மயானத்திற்கு அருகில் விட்டுச்சென்றிருந்த நிலையில், பொலிஸாரால் நேற்றைய தினம் அந்த முச்சக்கரவண்டி கைப்பற்றப்பட்டது. தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடு ரொஷானின் மனைவியின் பெயரிலேயே குறித்த முச்சக்கரவண்டி பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதன் பிரகாரம், மட்டக்குளிய பகுதியிலுள்ள குறித்த பெண்ணின் வீட்டை பரிசோதித்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மூவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் குடு ரொஷானின் சகோதரரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். 18 , 19 மற்றும் 34 வயதான மூவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு முச்சக்கரவண்டிகளில் வந்த குழுவினர், காரில் பயணித்துக்கொண்டிருந்த, திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ஆனமாலு ரங்க உள்ளிட்ட இருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளனர்.