அறுவைக்காட்டில் குப்பைகள் கொட்டுவதற்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டம்

by Staff Writer 16-08-2019 | 8:37 PM
Colombo (News 1st) புத்தளம் - அறுவைக்காட்டில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று புத்தளம் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் வலுப்பெற்றது. ஜூம்மா தொழுகைக்குப் பின்னர் புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. புத்தளம் மாவட்ட சர்வ மதத் தலைவர்கள் , புத்தளம் பெரிய பள்ளிவாசல், கிளீன் புத்தளம், புத்தளம் நகர சபை ஆகியன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. இந்த ஆர்ப்பாட்டத்தில் சர்வ மதத் தலைவர்கள், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மேல் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர். சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பியவாறும் சுலோகங்களை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பங்கேற்றிருந்தனர்.