ஜனாதிபதித் தேர்தல் குறித்த SLFP இன் நிலைப்பாடு

ஜனாதிபதித் தேர்தல் குறித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு செப்டெம்பர் 3இல்

by Staff Writer 15-08-2019 | 12:38 PM
Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டினை எதிர்வரும் 3ஆம் திகதி வௌியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இன்று (15) முற்பகல் கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இதைக் குறிப்பிட்டுள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் அறிவிக்கப்படும் எனவும் மஹிந்த அமரவீர இதன்போது கூறியுள்ளார்.    

ஏனைய செய்திகள்