by Staff Writer 15-08-2019 | 3:46 PM
Colombo (News 1st) மொஹமட் சஹ்ரானுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற மேலும் மூன்று பேர் அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜமாதைய் மில்லதே இப்ராஹிம் அமைப்பை சேர்ந்த மூன்று பேரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
மாவனெல்ல பகுதியை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலியாவில் பயிற்சி பெற்ற இரண்டு பேரும், ஹம்பாந்தோட்டையில் பயிற்சி பெற்ற ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.