மேலதிக சோள இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

மேலதிக சோள இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

by Staff Writer 14-08-2019 | 2:19 PM
Colombo (News 1st) உள்நாட்டின் தேவைக்காக மேலும் 30 000 மெட்ரிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. விலங்குகளுக்கான உணவு உற்பத்திக்காக இவை இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் சோளம் இறக்குமதி செய்யப்படவுள்ளதுடன், ஒரு கிலோ சோளத்திற்காக 10 ரூபா விசேட வரி அறிவிடப்படவுள்ளது. விலங்குகளுக்கான உணவிற்காக, ஏற்கனவே 50 000 மெட்ரிக் தொன் சோளம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.