பிரதமரை சந்திக்க முயன்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களைத் தடுத்த பொலிஸார்

by Staff Writer 14-08-2019 | 8:22 PM
Colombo (News 1st) வவுனியா பொது வைத்தியசாலையின் புதிய கட்டடத் திறப்பு விழாவிற்கு இன்று வருகை தந்திருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முயன்றனர். எனினும், வவுனியா சுற்றுவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களை பொலிஸார் தடுத்ததை அடுத்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அவ்விடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, பொலிஸாருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.