செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 14-08-2019 | 6:16 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு தீர்மானம் மிக்கது என துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். 02. தாம் உள்ளிட்ட குழுவினர் பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை ஆதரிப்பதாக எஸ்.பி. திசாநாயக்க கூறியுள்ளார். 03. கொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள், பிரதமருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். 04. கிளிநொச்சி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கான குடிநீர் விநியோகம் முன்னறிவித்தலின்றி தடைப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. 05. யாழ். பண்டத்தரிப்பு பகுதியில் 39 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 06. கொழும்பு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை வகை பிரித்துத் தருமாறு கொழும்பு மாநகர சபை, மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. 07. கட்டுநாயக்க விமான நிலையத்தில், ஐஸ் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் நீண்ட காலமாக முன்னெடுக்கப்படுகின்றமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வௌிநாட்டுச் செய்திகள் 01. மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அலெஜாண்ட்ரோ கியாமடேய் (Alejandro Giammattei) வெற்றி பெற்றுள்ளார். 02. நகரத்தை படுகுழியில் தள்ள வேண்டாம் என ஹொங்கொங் தலைவர் கேரி லேம் (Carrie Lam), போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 03. போர்த்துக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எரிபொருள் தாங்கி சாரதிகளை போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. விளையாட்டுச் செய்தி 01. இலங்கை மற்றும் பங்களாதேஷ் வளர்முக அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.