by Staff Writer 13-08-2019 | 8:49 AM
Colombo (News 1st) கொழும்பு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை வகை பிரித்துத் தருமாறு கொழும்பு மாநகர சபை, மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் காலங்களில் பிரிக்கப்பட்ட குப்பைகள் மாத்திரமே மாநகர சபையினால் சேகரிக்கப்படும் என கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித்த நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் குப்பைகளை சேகரிக்கும் ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை அருவக்காட்டுக்கு கொண்டுசெல்வது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று (13) நடைபெறவுள்ளது.
இது குறித்து தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் இன்று கவனம் செலுத்தப்படவுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித்த நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.